1. Home
  2. தமிழ்நாடு

கல்வி நிலையத்தில் குண்டு வெடிப்பு – 19 பேர் உயிரிழப்பு!!

கல்வி நிலையத்தில் குண்டு வெடிப்பு – 19 பேர் உயிரிழப்பு!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கல்வி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் 19 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானில் தாலிபான் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தலைநகர் காபூலுக்கு மேற்கு பகுதியில் தஸ்த்-இ-பார்ச்சி என்ற பகுதியில் ஷியா இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர்.

அங்கு காஜ் உயர் கல்வி நிறுவனம் உள்ளது. இங்கு மாணவ, மாணவியர் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்காக பயின்று வருகின்றனர். இந்த கல்வி நிறுவனத்தில் இன்று சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.


கல்வி நிலையத்தில் குண்டு வெடிப்பு – 19 பேர் உயிரிழப்பு!!


அங்கு படித்து வரும் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் மாணவியர்களே என காவல்துறை தெரிவித்துள்ளது. படுகாயம் அடைந்த 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.]

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்பு உரிய சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது உயிர்சேதம் குறித்த முதற்கட்ட தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது. முழுமையான விவரம் வெளியாகும் போது எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


கல்வி நிலையத்தில் குண்டு வெடிப்பு – 19 பேர் உயிரிழப்பு!!

இந்த சம்பவத்தின் பின்னணியில் ஐஎஸ் அமைப்பு ஈடுபட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கல்வி நிலையத்தில் மாணவர் உருவில் பயங்கரவாதி நுழைந்து இந்த தாக்குதலில் நடத்தியிருக்கலாம் என உள்துறை அமைப்பு விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like