1. Home
  2. வர்த்தகம்

மக்களுக்கு குட் நியூஸ்.. கோயம்பேட்டில் ஜன.17 வரை சிறப்பு சந்தை..!

மக்களுக்கு குட் நியூஸ்.. கோயம்பேட்டில் ஜன.17 வரை சிறப்பு சந்தை..!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று நள்ளிரவு (10-ம் தேதி) முதல் வரும் 17-ம் தேதி வரை சிறப்பு சந்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அங்காடி நிர்வாகம் சார்பில் 10 நாட்கள் வரை சிறப்பு சந்தை நடத்தப்படும். இதில், கரும்பு, வாழைக் கன்று, மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து மற்றும் மண்பானை, வாழை இலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும்.


இந்த சிறப்பு சந்தைக்காக கடைகள் ஏலம் விடப்படும். அதில், மார்க்கெட்டில் உரிமம் உள்ளவர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும் என வியாபாரிகள் சார்பில் கோரிக்கை எழுந்தது. அதன்படி, 3 ஏக்கரில் சிறப்பு சந்தை நடத்த அங்காடி நிர்வாகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று இரவு (10-ம் தேதி) 12 மணியில் இருந்து வரும் 17-ம் தேதி வரை சிறப்பு சந்தை அமைக்கப்பட உள்ளது. வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று அங்காடி நிர்வாகம் சார்பில் சிறப்பு சந்தையை ஏற்படுத்தி அங்காடி நிர்வாகமே பொறுப்பேற்று உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like