நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 162ஆக உயர்வு!!
இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 எனப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நகரமே குலுங்கியது.
இதனால் மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்தனர். பலர் திறந்த வெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியடித்துக்கொண்டு ஓடினர். சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நிலநடுக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 162ஆக உயர்ந்துள்ளது. 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. அங்கு மின்சாரம் தடைபட்டது. இதனால் ஏராளமான மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். மீட்புக் குழுக்களுடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
newstm.in