1. Home
  2. லைப்ஸ்டைல்

வருங்கால மருமகனுக்கு 125 வகை உணவுகள் செய்து கொடுத்த மாமியார்!!

வருங்கால மருமகனுக்கு 125 வகை உணவுகள் செய்து கொடுத்த மாமியார்!!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் எஸ்.கோட்டா பகுதியை சேர்ந்த சைதன்யா என்ற இளைஞருக்கும், விசாகப்பட்டினத்தை சேர்ந்த நிஹாரிகாவுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தசரா பண்டிகைக்கு வருமாறு வருங்கால மாப்பிள்ளையை பெண் வீட்டார் அழைத்துள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்து, சைதன்யா பெண் வீட்டுக்கு வந்தார்.


வருங்கால மருமகனுக்கு 125 வகை உணவுகள் செய்து கொடுத்த மாமியார்!!


அப்போது, அவருக்கு 125 வகை பலகாரங்கள், உணவு வகைகளை பரிமாறி அவரது மாமியார் அசத்தினார். அவற்றை சாப்பிட முடியாமல் பாதியிலேயே எழுந்து விட்டார் சைதன்யா. இதில் பல உணவு வகைகளின் பெயர் கூட அவருக்குத் தெரியாது.

ஆனால், ருசியாக உள்ளது என வருங்கால மாமியாரின் கைப்பக்குவத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். வருங்கால மருமகனுக்கு 125 வகை உணவு சமைத்துக் கொடுத்து அசத்திய மாமியாரின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.



newstm.in

Trending News

Latest News

You May Like