1. Home
  2. தமிழ்நாடு

தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி!!

தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி!!

இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஷிமோகா அருகே சோரடி என்ற இடத்தில்தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது. இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி!!

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார் மற்றும் மீட்புக்குழுவினர் துரிதமாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர். பலரும் பேருந்தில் சிக்கிக் கொண்டதால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டது.

இதுவரை 10 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. போலீசார், காயமடைந்தவர்களை உள்ளூர் மக்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை தொடர்ந்து அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

newstm.in

Trending News

Latest News

You May Like