1. Home
  2. தமிழ்நாடு

காதலிப்பது ஒருவரை கல்யாணம் செய்வது ஒருவரையா.? ஏமாற்றிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை..!!

காதலிப்பது ஒருவரை கல்யாணம் செய்வது ஒருவரையா.? ஏமாற்றிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை..!!

சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதியான தினேஷ்குமார், அதே பகுதியை சேர்ந்த 25 வயது விளையாட்டு வீராங்கனையான இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும், பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமணத்திற்கு 3 மாதங்களுக்கு முன்னதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் பதிவான வழக்கின் விசாரணை, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.ஹெச்.முகமது பாரூக் முன் நடந்ததம்போது, அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆரத்தி பாஸ்கரன் ஆஜரானார். இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், தினேஷ்குமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 55 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராதத் தொகையில், 50 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like