1. Home
  2. தமிழ்நாடு

பிளஸ்-1 மாணவிக்கு பெண் குழந்தை.. காதல் கணவன் போக்சோவில் கைது..!

பிளஸ்-1 மாணவிக்கு பெண் குழந்தை.. காதல் கணவன் போக்சோவில் கைது..!

அன்னூரில். பிளஸ்-1 மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக, அவருடைய காதல் கணவனான டிரைவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், அன்னூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாணவிக்கும், அன்னூரை சேர்ந்த டிரைவர் பிரபாகரன் (22) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இதனால் 2 பேரும் தனியாக சந்தித்து வந்தனர்.


இந்நிலையில், மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பிரபாகரன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமி தனது காதலனிடம் தெரிவித்தார். இதையடுத்து பிரபாகரன், பெற்றோருக்கு தெரியாமல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மாணவியை கோவிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவர் தனது வீட்டுக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதற்கிடையே கடந்த 20-ம் தேதி மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து பிரபாகரன், காதல் மனைவியை பிரசவத்துக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு, அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.


டாக்டர்கள் விசாரணை நடத்தியதில், பிளஸ்-1 மாணவி 17 வயதில் குழந்தை பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள், குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Trending News

Latest News

You May Like