1. Home
  2. தமிழ்நாடு

வடமாநிலங்களில் தொடரும் நிலநடுக்கம்!..பொதுமக்கள் அச்சம்!....

வடமாநிலங்களில் தொடரும் நிலநடுக்கம்!..பொதுமக்கள் அச்சம்!....

மேகலாயாவில் 3.2 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.


மேகாலயா மாநிலம் நாங்போ பகுதியின் வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் நேற்று நள்ளிரவு 11.28 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 3.2 ரிக்டர் அளவில் பதிவானது.


வடமாநிலங்களில் தொடரும் நிலநடுக்கம்!..பொதுமக்கள் அச்சம்!....


இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று காலை அரியானாவில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் டெல்லியிலும் உணரப்பட்டது. தொடர்ந்து வட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like