1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

இன்று முதல் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

கொரோனா பரவல் மீண்டும் பல நாடுகளில் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், இந்தியாவிலும் மக்கள் முக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.

இதைத்தொடர்ந்து, “புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்” என்று, தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி அறிவித்துள்ளார்.

மேலும், திருப்பதி அலிப்பிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம், ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் இன்று இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு கவுண்டர்கள் மூடப்பட்டன.

புத்தாண்டையொட்டி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று நள்ளிரவு முதல் திருப்பதியில் குவிந்து வருகின்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இலவச நேர ஒதுக்கீடு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like