1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் ஆர்டி-பிசிஆர் சான்றிதழ் கட்டாயம்..! எங்கு தெரியுமா ?

இன்று முதல் ஆர்டி-பிசிஆர் சான்றிதழ் கட்டாயம்..! எங்கு தெரியுமா ?

இந்த 6 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய 6 நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் விமானப் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக இந்த சோதனை நடத்தப்பட வேண்டும். அதில், கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகேஇந்தியாவுக்கான விமானப் பயணத்தை பயணிகள் மேற்கொள்ள வேண்டும்.இந்த நடைமுறை இன்று முதல் அமலானது

ஏர் சுவிதா வலைதளத்தில் சுயஅறிவிப்பு படிவங்களை சமர்ப்பிப்பதுடன் கொரோனா பரிசோதனைக்கான ஆர்டி-பிசிஆர் சான்றிதழ்களையும் மேற்கண்ட ஆறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அதேபோன்று, சர்வதேச விமானங்களில் வந்திறங்கும் பயணிகளில் 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தற்போதைய நடைமுறையும் தொடர்ந்து அமலில் இருக்கும் என விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Trending News

Latest News

You May Like