1. Home
  2. தமிழ்நாடு

பெற்றோர்களே கவனம்..!! ஒரு சின்ன பென்சில் தானே என கவன குறைவாக இருக்காதீங்க..!!

பெற்றோர்களே கவனம்..!! ஒரு சின்ன பென்சில் தானே என கவன குறைவாக இருக்காதீங்க..!!

உத்தர பிரதே மாநிலம் ஹமிர்பூரை சேர்ந்த ஆர்த்திகா என்ற 1-ம் வகுப்பு மாணவி, நேற்று மாலை வீட்டின் மொட்டை மாடியில் தனது சகோதரர் அபிஷேக் மற்றும் சகோதரி அன்ஷிகாவுடன் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். வீட்டுப்பாடம் செய்வதற்கு முன், வாயால் ஷார்ப்பனரைப் பிடித்துக்கொண்டு பென்சிலை சீவிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று ஒரு பென்சில் தோல் சிறுமியின் தொண்டைக்குள் சிக்கியது. இதனால் மூச்சு விட முடியாமல், அந்த சிறுமி மூச்சுத் திணறி தரையில் சுருண்டு விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


பெற்றோர்களே கவனம்..!! ஒரு சின்ன பென்சில் தானே என கவன குறைவாக இருக்காதீங்க..!!

அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சோக சம்பவம் காரணமாக சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அவர்கள் மறுத்துவிட்டனர்.

பென்சில் தோல் தொண்டைக்குள் சிக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆறு வயது சிறுமி உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்ததுள்ளது.


Trending News

Latest News

You May Like