1. Home
  2. தமிழ்நாடு

இந்த சிப்ஸ் பாக்கெட்க்கு திடீர் கிராக்கி... அதிஷ்டத்திற்காக அலைமோதும் மக்கள் கூட்டம்..!!

இந்த சிப்ஸ் பாக்கெட்க்கு திடீர் கிராக்கி... அதிஷ்டத்திற்காக அலைமோதும் மக்கள் கூட்டம்..!!

பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பல விதமான சிப்ஸ் பாக்கெட்டுகள் தான் இந்த காலத்து குழந்தைகளுக்கு பிடித்த நொறுக்குத்தீனி. வீட்டின் பக்கத்தில் உள்ள பெட்டிக்கடையில் இருந்து, பள்ளிக்கு வெளியே சேர் போட்டு அமர்ந்திருக்கும் பாட்டி கடை வரை, சிறுவர்கள் கண்ணை கவரும் வகையில் சிப்ஸ் பாக்கெட்டுகள் தொங்கிக்கொண்டிருக்கும்.

1 ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரை வகையாக வகையாக இருக்கும் நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளை வாங்கித்தரும்படி, குழந்தைகள் பெற்றோரை நச்சரிப்பார்கள். அவை உடல்நலத்திற்கு நல்லதல்ல என்பதால் பெற்றோர்கள் அதனை வாங்கிக் கொடுக்க மாட்டார்கள்.

இந்நிலையில் அதே சிப்ஸ் பாக்கெட்களை மக்கள் வாங்க வரிசை கட்டி நிற்கின்றனர். ஏன் தெரியுமா ?

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் குழந்தைகள் சாப்பிட்ட 2 ரூபாய் மதிப்பிலான பல சிப்ஸ் பாக்கெட்டில், 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது. இதனால், பலரும் சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி தங்களின் அதிர்ஷ்டத்தை சோதித்து வருகின்றனர். அதாவது ஒரு நிறுவனத்தின் பாக்கெட்டுகளில் மட்டுமில்லை, பல்வேறு நிறுவனங்களின் பாக்கெட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிலருக்கோ 5-6 வரை 500 ரூபாய் நோட்டுகள் ஒரே பாக்கெட்டில் கிடைத்துள்ளன. ஒரு சிலருக்கு, 2-3 நோட்டுகள் கிடைத்துள்ளன. இதனால் அந்த சிப்ஸ் பாக்கெட்களை வாங்க மக்கள் குவிந்துள்ளனர்

Trending News

Latest News

You May Like