1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..!! வெறும் மிஸ்டு கால் கொடுத்து பணத்தை அபகரித்த கும்பல்..!!

மக்களே உஷார்..!! வெறும் மிஸ்டு கால் கொடுத்து பணத்தை அபகரித்த கும்பல்..!!

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாதுகாப்பு சேவை மையத்தின் இயக்குநருக்கு இரவு 7 மணி முதல் 8.45 மணி வரை பல முறை பிளாங் அழைப்பு வந்துள்ளது. எடுத்த அழைப்பில் யாரும் பேசாததால் சில அழைப்புகளை அவர் எடுக்கவில்லை. பிறகு அவரது செல்பேசிக்கு வந்த தகவலில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து 12 லட்சம், 4.6 லட்சம், இரண்டு முறை 10 லட்சம் என நான்கு பேரின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அவர் புகார் அளிக்க, விசாரணை நடத்தியதில், வங்கிக் கணக்குக்கு பணம் சென்றவர்களை அழைத்து விசாரித்ததில், மோசடியாளர்கள், தரகு அளிப்பதாகக் கூறி தங்களது வங்கிக் கணக்கைக் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர். சைபர் குற்றவாளிகள் அதிகளவில் பணத்தை அதுவும் புதிய முறையில் மோசடி செய்திருப்பதால், இது பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக பணப்பரிமாற்றங்கள் செய்யும் போல பல நிபந்தனைகள் இருக்கும். ஆனால், இயக்குநரின் வங்கிக் கணக்கு நடப்புக் கணக்கு என்பதால் அந்த கட்டுப்பாடுகள் இல்லை. இதனால், எந்த தடையும் இல்லாமல் மோசடி நடந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், சிம் ஸ்வாப் முறையில், சைபர் குற்றவாளிகள் பணத்தை மோசடி செய்திருக்கலாம் என்றும், இரண்டு முறை நிரூபிக்கும் அல்லது இரண்டு முறை உறுதிப்படுத்தும் வங்கிக் கணக்கைத் திறக்கும் வாய்ப்புகளில் இருக்கும் சில தொழில்நுட்ப நுணுக்கங்களைப் பயன்படுத்தி மோசடியாளர்கள், ஒரு நபருக்கு அழைப்பு விடுத்து, அந்த சிம் கார்டை ஆக்டிவேட் செய்து அதன் மூலம் வங்கியிலிருந்து பணத்தை மோசடி செய்யும் புதிய யுக்தியை கையாண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுபோல இந்த ஆண்டு துவக்கத்தில் இரண்டு தொழிலதிபர்களின் வங்கிக் கணக்கிலிருந்து வெறும் மிஸ்டு கால் கொடுத்து பணத்தை மோசடி செய்த தகவல்களும் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like