1. Home
  2. தமிழ்நாடு

இசை கலைஞர்களுடன் டோல் அடித்து பிரதமர் மோடி உற்சாகம்!!

இசை கலைஞர்களுடன் டோல் அடித்து பிரதமர் மோடி உற்சாகம்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா சென்ற பிரதமர், நாட்டின் 6ஆவது வந்தே பாரத் ரயிலை நாக்பூர் - பிலாஸ்பூர் இடையே தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, நாக்பூர் மெட்ரோவின் முதல் கட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுத்து பயணித்தார். அத்துடன் இரண்டாம் கட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

பாலாசாஹேப் தாக்ரே மகாராஷ்டிரா சம்ருத்தி மகாமார்க் என்ற திட்டத்தின் கீழ் நாக்பூர் - ஷீரடி இடையே 520 கிமீ நெடுஞ்சாலை திட்டத்தை தொடங்கி வைத்தார்.


இசை கலைஞர்களுடன் டோல் அடித்து பிரதமர் மோடி உற்சாகம்!!

நாக்பூர் வருகை தந்த பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு டோல் என்ற பெரிய முரசுகளை அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்த டோல் வாத்தியத்தை அடிக்கும் கலைஞர்களை பார்த்ததும் ஆர்வத்துடன் அங்கு சென்ற பிரதமர் மோடி, அவர்களுடன் இணைந்து தானும் டோல் வாத்தியத்தை அடித்து மகிழ்ந்தார்.

இதை பார்த்து அங்கிருந்த இசை கலைஞர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். பிரதமர் மோடியும் தான் வாத்தியம் அடிக்கும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



newstm.in

Trending News

Latest News

You May Like