1. Home
  2. தமிழ்நாடு

தாய் மற்றும் மகனை கொன்று விட்டு தந்தை தற்கொலை... சிக்கிய உருக்கமான தற்கொலை கடிதம்..!!

தாய் மற்றும் மகனை கொன்று விட்டு தந்தை தற்கொலை... சிக்கிய உருக்கமான தற்கொலை கடிதம்..!!

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் நடுகொண்டையம் பேட்டை அகிலா நகரில் வசித்து வருபவர் லட்சுமணன். இவரது மனைவி வசந்தா (68). இவரகளுது ஒரே மகன் கார்த்திகேயன் (34). கார் ஓட்டுநரான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சாமிநாதன் (8) என்ற மகன் இருந்தார்.

இந்த நிலையில் கார்த்திகேயன் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பி.ஆர்.ஓ.வாக வேலை பார்த்தார். இங்கு போதிய வருமானம் இல்லை அதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வேலைக்காக துபாய்க்கு சென்றார். அங்கு ஒரு நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்தார்.


தாய் மற்றும் மகனை கொன்று விட்டு தந்தை தற்கொலை... சிக்கிய உருக்கமான தற்கொலை கடிதம்..!!

அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து சென்றார். அவரது தாய் வசந்தா, மனைவி, மகன் ஆகியோர் அகிலா நகரில் உள்ள ஒரு மாடி வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். இதற்கிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். நேற்று காலை அவரது மனைவி வசந்த பிரியா வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையே மாலையில் வீட்டை உள் பக்கமாக பூட்டிவிட்டு தாய் வசந்தா, மகன் சாமிநாதன் ஆகியோரை கொன்று விட்டு கார்த்திகேயனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி தலைமையிலான போலீசார் இறந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வீட்டு அறையில் போலீசார் சோதனை நடத்திய போது கடிதம் ஒன்று சிக்கியது. அதில், எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. தாய், மகன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவர்களை தன்னுடன் அழைத்து செல்வதாக கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தாய் மற்றும் மகனை கொன்று விட்டு தந்தை தற்கொலை... சிக்கிய உருக்கமான தற்கொலை கடிதம்..!!

தற்போது கடிதத்தின் முழு விவரம் வெளியாகி உள்ளது. அதில் மனைவி நன்றாக படித்து இருக்கிறாள். நல்ல வேலை பார்க்கிறாள். மனைவியை அவளது இஷ்டத்துக்கு வாழ விடுங்கள். எனக்கு மன உளைச்சல் அதிகமாக இருக்கிறது. எனவே சாக முடிவு செய்துவிட்டேன். தாயும், மகனும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவர்களையும் தன்னுடன் அழைத்து செல்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

கடிதத்தின் சாராம்சத்தை பார்க்கும்போது கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கார்த்திகேயன் தாயையும், மகனையும் கொன்று விட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி திருவானைக்காவல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like