இலங்கையில் அதிரடி.... தளர்வுகள் நீக்கம்! மீளுமா பொருளாதாரம்?
இலங்கையில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெளிநாட்டினர், சுற்றுலா பயணிகள் இலங்கை வர அந்நாட்டின் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன்படி கொரோனா தடுப்பூசி, கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் போன்றவற்றை சுற்றுலா பயணிகள் வைத்திருக்க வேண்டும்.
இந்த நிலையில் நேற்று இலங்கை சுகாதார அமைச்சகம் இந்த கொரோனா கட்டுப்பாடுகளை அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை இலங்கை வந்த பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்கள் தனியார் மருத்துவமனை, விடுதி அல்லது அவர்களது வீட்டிலேயே 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலுக்கான செலவுகளை அவர்களே ஏற்க வேண்டும் என இலங்கை சுகாதார அமைச்சக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளால் இலங்கைக்கு செல்ல விரும்பிய சுற்றுலா விரும்பிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம் இலங்கையின் பொருளாதாரமும் இனி மெல்ல எழும் என்று நம்பப்படுகிறது.
newstm.in