1. Home
  2. விளையாட்டு

இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டன் போட்டியில் இருந்து விலகல்..ரசிகர்கள் அதிர்ச்சி

இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டன் போட்டியில் இருந்து விலகல்..ரசிகர்கள் அதிர்ச்சி

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் லிவிங்ஸ்டன் விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில், 657 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்களை குவித்தனர்.





பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 579 ரன்கள் குவித்தது. இதையடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தது. நேற்று 4ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

இதையடுத்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 343 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து தனது 2வது இன்னிங்சை பாகிஸ்தான் விளையாடி வருகிறது.இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த ஆல் ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் தொடரில் இருந்து வெளியேறுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டனுக்கு வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் செவ்வாய் அன்று இங்கிலாந்து திரும்புவார். அவருக்கான மாற்று வீரரை அறிவிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like