மீனவர்களே, கடலுக்கு போகாதீங்க.. பலத்த சூறாவளி காத்து வீசப்போகுது..!
மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்கள் நாளை முதல் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நாளை (6-ம் தேதி) மாலை மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தொடர்ந்து மேற்கு - வடமேற்கில் நகர்ந்து படிப்படியாக புயலாக வலுபெற்று தமிழ்நாடு - புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் நாளை முதல் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கடலோர மாவட்டங்களிலும் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.