1. Home
  2. தமிழ்நாடு

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்யும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசிச்சு பண்ணுங்க..!!

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்யும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசிச்சு பண்ணுங்க..!!

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த சின்ன முதலியார்சாவடி எம்ஜிஆர் நகர் முதல் குறுக்கு தெருவில் வசித்து வருபவர் பெருமாள். இவரது மகன் முத்துசாமி (33).இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று அதிகாலை வழக்கம்போல் சின்ன முதலியார்சாவடி ஈசிஆர் சாலையில் நடைபயிற்சி சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மகேஸ்வரி உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து உறவினர்களுடன் மனைவி மகேஸ்வரி பல்வேறு இடங்களில் அவரைத் தேடியும் கிடைக்காததால் கோட்டகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், முத்துசாமி ஆன்லைன் வர்த்தகம் மூலம் பணத்தை இழந்ததும் அதில் பல்வேறு நபர்களிடமிருந்து ரூ.7 லட்சம் வரை கடன் பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார் என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான முத்துசாமியை தேடி வந்தனர்.

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்யும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசிச்சு பண்ணுங்க..!!

இந்த நிலையில் நேற்று மாலை நடுக்குப்பம் மீனவர் பகுதியில் கடற்கரையில் ஆண் சடலம் கரை ஒதுங்கி இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கோட்டகுப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி கனக செட்டிகுளம் தனியார் மருத்துவமனையில் பிரோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில், கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கிய நபர் முத்துசாமி என்பது தெரிய வந்ததுள்ளது. கடன் பிரச்னையால் இவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Trending News

Latest News

You May Like