1. Home
  2. விளையாட்டு

அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் உலகக் கோப்பை கால்பந்து..


உலகக்கோப்பை கால்பந்து 2ஆம் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகின்றன.

பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20 ஆம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும்.


அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் உலகக் கோப்பை கால்பந்து..


அதன் படி நெதர்லாந்து , செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா , அர்ஜென்டினா, போலந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், மொராக்கோ , குரோஷியா , பிரேசில், சுவிட்சர்லாந்து, போர்ச்சுக்கல், தென் கொரியா ஆகிய 16 அணிகள் 2 ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.



அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் உலகக் கோப்பை கால்பந்து..



இந்நிலையில், இரண்டாவது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இந்த சுற்றின் மூலம் 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும். இன்று நடைபெறும் 2 ஆவது சுற்று ஆட்டங்களில் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்த நெதர்லாந்து, பி பிரிவில் 2-வது இடத்தை பிடித்த அமெரிக்கா இரவு 8.30 மணிக்கு மோதுகின்றன. இதே போன்று, சி பிரிவில் முதல் இடத்தை பிடித்த அர்ஜென்டினா, டி பிரிவில் 2 ஆவது இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா நள்ளிரவு 12.30 மணிக்கு மோதுகின்றன. ஈக்வடார், கத்தார், ஈரான், வேல்ஸ், மெக்சிகோ, சவுதி அரேபியா, துனிசியா, டென்மார்க், ஜெர்மனி, கோஸ்டாரிகா, பெல்ஜியம், கனடா, கேமரூன், செர்பியா, உருகுவே, கானா ஆகிய நாடுகள் உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like