1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! நெல்லையில் போலீஸாருக்கு அரிவாள் வெட்டு!!

அதிர்ச்சி! நெல்லையில் போலீஸாருக்கு அரிவாள் வெட்டு!!

நெல்லை மாவட்டம் பழவூர் காவல் உதவி ஆய்வாளரான பார்த்திபன் என்பவர் அம்பலாவனபுரம் பகுதியில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது சண்முகபுரம் கிராமத்தை சேர்ந்த சங்கர் மற்றும் மணிகண்டன் ஆகியோர் வாகனத்தில் ஆற்று மணலை கடத்தி வந்தனர். அப்போது அவர்களை பார்த்திபன் தடுத்து நிறுத்தி அனுமதி சீட்டை சரிபார்த்தார்.

திடீரென சங்கர் என்பவர், காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபனை அரிவாளால் கை, தோள் பகுதிகளில் வெட்டினார். உடன் இருந்த காவலர் கார்த்தீசனை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றனர் .

வெட்டுப்பட்ட உதவி ஆய்வாளர் பார்த்திபன் ரத்தம் சொட்ட சொட்ட சண்டையிட்டு சங்கர் மற்றும் மணிகண்டனை கைது செய்தார். மணல் ஏற்றி வந்த வாகனம் மற்றும் அரிவாளை கைப்பற்றினர்.


அதிர்ச்சி! நெல்லையில் போலீஸாருக்கு அரிவாள் வெட்டு!!

இதனையடுத்து கொலை முயற்சி மற்றும் மணல் கடத்தல் வழக்கு என 2 பிரிவுகளில் கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மணல் கடத்தலில் ஈடுபட்ட சங்கர் மீது ஏற்கனவே பழவூர் , பணகுடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் மணல் கடத்தல் வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

காயமடைந்த உதவி ஆய்வாளர் பார்த்திபன், லேசாக காயம் அடைந்த காவலர் கார்த்திசன் ஆகிய இருவரும் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like