1. Home
  2. விளையாட்டு

சஞ்சு சாம்சனை ஒழிக்க பிசிசிஐ முயற்சி – முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு!!

சஞ்சு சாம்சனை ஒழிக்க பிசிசிஐ முயற்சி – முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு!!

ஷிகர் தவன் தலைமையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடர் முழுவதுமே அணியில் இடம்பெற்றிந்த சஞ்சு சாம்சனுக்கு ஆடும் 11இல் இடம் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து முதல் ஒருநாள் போட்டியில் அணியில் இடம்பெற்ற சாம்சன் அந்த போட்டியில் முக்கிய கட்டத்தில் 36 என்ற சீரான ரன்கள் குவித்தார்.

அணியில் இடம் பிடித்துள்ள விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சரியாக ஆடாமல், ரன்களை குவிக்காமல் இருக்கிறார். இதையடுத்து ரசிகர்கள் ரிஷப் பண்ட்க்கு ஓய்வு அளித்து விட்டு சாம்சனை ஆட வைக்க வேண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


சஞ்சு சாம்சனை ஒழிக்க பிசிசிஐ முயற்சி – முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு!!


இந்த நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா சாம்சன் கிரிக்கெட் தேர்வு செய்யாதது குறித்து பிசிசிஐ நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், " 2019 உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பாக அம்பத்தி ராயுடு ஒரு நாள் போட்டிகளில் அதிகமான ரன்களை குவித்தார். ஆனாலும் அவர் உலக கோப்பை அணியில் இடம் பெறவில்லை.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இதே போன்ற ஒரு நிலைக்கு தான் சாம்சனையும் பிசிசிஐ நிர்பந்திப்பது போல் தெரிகிறது. சாம்சன் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.




அவர் கடைசியாக ஆடி உள்ள 11 போட்டிகளில் சராசரியாக 60 வைத்திருக்கிறார். இருப்பினும் அவரை ஆடும் லெவனில் சேர்க்காமல் தொடர்ந்து புறக்கணிப்பது அவரது கிரிக்கெட் வாழ்வை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று கூறியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like