1. Home
  2. தமிழ்நாடு

திருவண்ணாமலைக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை..!

திருவண்ணாமலைக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை..!

கார்த்திகை கார்த்திகை தீபத் திருவிழாவினை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிசம்பர் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில், திருக் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 6-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.


அதேபோல, கார்த்திகை தீபத் திருவிழாவினை ஒட்டி திருவண்ணாமலைக்கு டிசம்பர் 6, 7, 8 ஆகிய தினங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபத் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் கூடுவர் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருக்கார்த்திகை மகா தீபத்தன்று மலை ஏறுவதற்கு 2,500 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like