1. Home
  2. தமிழ்நாடு

உணவில் விஷம் கலந்து கொல்ல முயற்சி: சரிதா நாயர் பரபரப்பு புகார்..!

உணவில் விஷம் கலந்து கொல்ல முயற்சி: சரிதா நாயர் பரபரப்பு புகார்..!

எனக்கு, உணவு மூலம் மெல்ல கொல்லும் தன்மை கொண்ட விஷம் தரப்பட்டுள்ளது. இவை உடலில் கலந்தால் நான் இறந்து விடுவேன். ரத்த பரிசோதனையில் இந்த உண்மை எனக்கு தெரியவந்தது என்று, சரிதா நாயர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கேரளா மற்றும் தமிழகத்தில் சோலார் பேனல் அமைத்து தருவதாகக் கூறி பலரிடம் லட்சக் கணக்கில் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சரிதா நாயர், அப்போதைய கேரள முதல்வர் உம்மன் சாண்டி உட்பட பலர் மீதும் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின்பு ஜாமீனில் விடுதலையான சரிதா நாயர், அவ்வப்போது கேரள அரசியல் பிரமுகர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் கூறிவந்தார்.


இந்த நிலையில், திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசில் சரிதா நாயர் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், "சில மாதங்களுக்கு முன்பு எனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இடது கண்ணிலும் பார்வை குறைபாடு ஏற்பட்டது. முடியும் அதிகமாக கொட்டியது. இதற்காக மருத்துவமனைக்கு சென்றேன்.

என்னை பரிசோதித்த மருத்துவர்கள், எனது ரத்தத்தில் அதிக அளவு ஆர்சனிக், பாதரசம் மற்றும் ஈயம் போன்ற ரசாயனங்கள் கலந்திருப்பதாகக் கூறினர். இந்த ரசாயனங்கள் விஷத்தன்மை கொண்டவை. இவை உடலில் கலந்தால் நான் இறந்து விடுவேன். இதற்காகவே எனக்கு மெல்ல கொல்லும் தன்மை கொண்ட விஷம் உணவு மூலம் எனக்கு தரப்பட்டுள்ளது. ரத்த பரிசோதனையில் இந்த உண்மை எனக்கு தெரியவந்தது.

உணவில் விஷம் கலந்து கொல்ல முயற்சி: சரிதா நாயர் பரபரப்பு புகார்..!

அவ்வப்போது நான் குடிக்கும் பழச்சாறு, குளிர்பானம் மற்றும் உணவுப் பொருளில் இதனை கலந்து எனக்கு கொடுத்துள்ளனர். இதனை யார் கலந்து கொடுத்தனர் என்பது எனக்கு தெரியாமல் இருந்தது. சமீபத்தில் நான் திருவனந்தபுரம் சென்றபோது, வழியில் ஒரு கடையில் பழச்சாறு குடித்தேன். அதனை எனது டிரைவர் வினுகுமார் வாங்கி வந்து தந்தார்.

அப்போது அவர் பழச்சாறில் எதையோ கலக்குவதை பார்த்தேன். அப்போதுதான் அவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரை நான் பணியில் இருந்து நீக்கிவிட்டேன். கடந்த 2018-ம் ஆண்டு நான் அரசியல் பிரமுகர்கள் சிலர் மீது பாலியல் புகார் கொடுத்தேன். அவர்கள் என்னை தீர்த்துக் கட்ட திட்டமிட்டனர். அவர்களுடன் சேர்ந்துதான் டிரைவர் வினுகுமார் இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் எனக் கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like