சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த வாரம் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த சனிக்கிழமை அதிகாலை வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால் நேற்று ஞாற்றுகிழமை என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.
இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. காலை 6 மணி வரை 10,000 பேர் தரிசனம் செய்தனர்.
நேற்று 47, 000 பேர் தரிசனம் செய்த நிலையில், இன்று ஆன்லைன் மூலம் இதுவரை 72, 000 பேர் முன் பதிவு செய்துள்ளனர்.
newstm.in