1. Home
  2. தமிழ்நாடு

பெரும் அதிர்ச்சி..!! அறுவை சிகிச்சை முடிந்து குழந்தைக்கு கொடுத்த பருப்பு குழம்பில் கரப்பான் பூச்சி..!!

பெரும் அதிர்ச்சி..!! அறுவை சிகிச்சை முடிந்து குழந்தைக்கு கொடுத்த பருப்பு குழம்பில் கரப்பான் பூச்சி..!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளி ஒருவர் குழம்பில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதை உடனடியாக படம் பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு வைரலானது. மேலும் அதில் அவர் கூறும்போது, ''சாப்பாடுடன் சேர்த்து கொடுக்கப்பட்ட இந்த குழம்பு 4 வயது குழந்தைக்கு கொடுக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.

சம்பந்தப்பட்ட குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் 2 நாட்களுக்கு உணவு எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்த 8 நாட்களாக குழந்தை எதுவும் சாப்பிடாமல் இருந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவர்களின் ஆலோசனையின்படி பருப்பு குழம்பும், கஞ்சியும் கொடுக்கப்பட்டது. அதில்தான் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் குடும்பத்தினர் கொதித்தெழுந்து மருத்துவ மனை நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் இது குறித்த விசாரணையை கையில் எடுத்துள்ளது.

மேலும் அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.



Trending News

Latest News

You May Like