1. Home
  2. தமிழ்நாடு

கை நிறைய சம்பளம்… வேலைக்கு ஆள் எடுக்கும் நித்தியானந்தா!!

கை நிறைய சம்பளம்… வேலைக்கு ஆள் எடுக்கும் நித்தியானந்தா!!

கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கிவிட்டதாக அறிவித்த நித்தியானந்தா, வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவிப்பு வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தியாவை விட்டு சென்றுவிட்டதாக சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் அறிவித்தார். கைலாசா என்ற நாட்டின் அதிபராக இருப்பதாக கூறிய நித்தியானந்தா, நிர்வாக ரீதியாக நாட்டிற்கான அமைச்சர்கள் பெயர்களையும் அறிவித்தார்.

மேலும், கைலைசா நாட்டிற்காக தனி வங்கி, தனி பணம் என்று கூறினார். ஆனால் அந்த நாடு எங்கு உள்ளது , எப்படி உள்ளது என்ற எந்த தகவலையும் இதுவரை பொதுவெளியில் கூறியதே இல்லை.


கை நிறைய சம்பளம்… வேலைக்கு ஆள் எடுக்கும் நித்தியானந்தா!!


நித்தியானந்தாவிற்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஒரு தீவில் பதுங்கியிருக்கும் அவர் எந்த நாட்டிற்கும் விமானத்தில் செல்ல முடியாதபடி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள தனது ஆசிரமங்களில் பணியாற்றுவதற்கு ஆட்கள் தேவை என்று அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எலட்ரானிக் , பிளம்மிங் பணிகளுக்கும், தூதரக பணிகளுக்கும் ஆட்கள் தேவை என்று கூறப்பட்டுள்ளது.


கை நிறைய சம்பளம்… வேலைக்கு ஆள் எடுக்கும் நித்தியானந்தா!!

பணியில் சேர்வோருக்கு ஊதியத்துடன் பயிற்சி கொடுக்கப்பட்டு பல்வேறு ஆசிரமங்களில் பணி அமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே நித்தியானந்தாவிடம் பல்வேறு வகையில் சிக்கி ஏமாற்றப்பட்டவர்கள் இதை பார்த்து மேலும் அதிர்ச்சியில் உள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like