1. Home
  2. தமிழ்நாடு

சென்னை வந்தே பாரத் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

சென்னை வந்தே பாரத் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

தென் இந்தியாவில் முதன்முறையாக சென்னை- மைசூரு இடையே வந்தேபாரத் அதிவிரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

பிரதமர் காலை 9 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தார். அவரை கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, கவர்னர் தாவர்சந்த் கெலாட், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்

பின்னர் விதான் சவுதாவுக்கு சென்ற பிரதமர், கனகதாசர் ஜெயந்தியையொட்டி அங்குள்ள கனகதாசர் மற்றும் வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பிரதமர் மோடி அங்கிருந்து பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திற்கு சென்றார். அங்கு சென்னை - மைசூரு வந்தேபாரத் அதிவிரைவு ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.


சென்னை வந்தே பாரத் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

அதே இடத்தில் பாரத் கவுரவ் காசி தரிசன ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இது தென் இந்தியாவின் முதல் வந்தேபாரத் ரயில்.

இந்திய தொழில்நுட்பத்தில் அதிநவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த ரயில் சென்னையில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மைசூருவுக்கு செல்லும்.


மறுமார்க்கமாக மைசூருவில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ர்யில் நிலையம் வந்தடையும். இதன் மூலம் சென்னையில் இருந்து மைசூருவுக்கு 6.40 மணி நேரத்தில் சென்றுவிடலாம்.

தொடர்ந்து சென்னை வரும் பிரதமர் மோடி, திண்டுக்கல் சென்று காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 36ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like