1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் இனி இவர்களுக்கு எல்லாம் மின் கட்டணம் குறைப்பு..!!

தமிழகத்தில் இனி இவர்களுக்கு எல்லாம் மின் கட்டணம் குறைப்பு..!!

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை 10 சதவீதம் குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2022-2023 ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.09.2022 முதல் மின்கட்டண ஆணை எண்.7/22, நாள் 09.09.2022-ன் படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளதால், ஒருநாளின் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை (Peak Hour Charges) குறைக்கும்படி பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.


தமிழகத்தில் இனி இவர்களுக்கு எல்லாம் மின் கட்டணம் குறைப்பு..!!

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு, அவர்களின் கோரிக்கையினை ஏற்று குறைந்தழுத்த மின் இணைப்பு (Low Tension III-B) கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைக்கலாம் என முடிவு செய்து உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாறு மின்கட்டணத்தை குறைப்பதால் தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like