1. Home
  2. தமிழ்நாடு

கொள்ளையர்கள் பர்சை பறித்ததில் இ-ரிக்சாவில் இருந்து தவறி விழுந்த பெண் பலி..!!

கொள்ளையர்கள் பர்சை பறித்ததில் இ-ரிக்சாவில் இருந்து தவறி விழுந்த பெண் பலி..!!

டெல்லியில் பிரசாந்த் விகார் பகுதியில் சுமித்ரா மிட்டல் (56) என்பவர் நேற்று இ-ரிக்சாவில் ஏறி பயணித்து உள்ளார். அப்போது அந்த வழியில், பைக் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத சில நபர்கள் பெண்ணிடம் இருந்த பர்சை பறித்து செல்ல முயன்றுள்ளனர். உடனடியாக உஷாரான அந்த பெண் பர்சை பறிக்க விடாமல் இழுத்து பிடித்து கொண்டதுடன், போராடி அவர்களை தடுக்க முற்பட்டு உள்ளார்.

கொள்ளையர்கள் பர்சை பறித்ததில் இ-ரிக்சாவில் இருந்து தவறி விழுந்த பெண் பலி..!!

இதனால், ஆத்திரத்தில் அவர்கள் பர்சை இழுத்ததில் இ-ரிக்சாவில் இருந்து அந்த பெண் தவறி கீழே விழுந்து உள்ளார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.

இதனை தொடர்ந்து பல தனிப்படைகளை அமைத்து தப்பியோடிய நபர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர். சுமித்ரா தனது இளைய மகனின் மனைவி மற்றும் பேரனுடன் ஒன்றாக வசித்து வருகிறார். துணிக்கடை ஒன்றை நடத்தி வரும் இவர், தனது சகோதரரை பார்ப்பதற்காக செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

இது குறித்து பிரசாந்த் விகார் நிலைய போலீசார் கூறுகையில், கொள்ளையர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடத்தல்காரர்கள் சுமித்ராவை நேரடியாகத் தாக்காத நிலையில், அவரது பர்சை பிறித்துக் கொண்டு ஓடும் வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் சுமித்ராவுக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். ஐபிசி பிரிவுகள் 302 (கொலை) மற்றும் 397 (கொள்ளை, கொள்ளையடித்தல் மற்றும் மரணம், கடுமையான காயத்தை ஏற்படுத்தும் முயற்சி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



Trending News

Latest News

You May Like