1. Home
  2. தமிழ்நாடு

அலர்ட்! வலுவடைந்தது சித்ரங் புயல்!! எங்கெல்லாம் மழை?

அலர்ட்! வலுவடைந்தது சித்ரங் புயல்!! எங்கெல்லாம் மழை?

வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது நேற்று அதிகாலை வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுவடைந்து இருக்கிறது.

இந்த புயலுக்கு சித்ரங் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த பெயரை தாய்லாந்து வழங்கியிருக்கிறது. சித்ரங் புயல் வலுவடைந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.


அலர்ட்! வலுவடைந்தது சித்ரங் புயல்!! எங்கெல்லாம் மழை?


இதனால் மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த புயல் மேலும் வலுவடைந்து அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சித்ரங் புயல் வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வங்காளதேச கடற்கரைப் பகுதிகளில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like