1. Home
  2. தமிழ்நாடு

வீரப்பனை சுட்டு வீழ்த்திய விஜயகுமார் திடீர் ராஜினாமா..!!

வீரப்பனை சுட்டு வீழ்த்திய விஜயகுமார் திடீர் ராஜினாமா..!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார். இவர் 1975 ஆம் ஆண்டில் பட்டுக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியில் சேர்ந்தார. அதன் பின்னர் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக தொடர்ந்தார். இதன் பின்னர் மத்திய அரசு பணிக்காக அனுப்பப்பட்ட விஜயகுமார்அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் மெய்க்காவல் படை தலைவராக பணிபுரிந்தார். பின்னர் 1991 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வரான பின்னர் அவரது மெய்க்காவல் படை தலைவராக நியமிக்கப்பட்டார்.

2001–ம் ஆண்டு கே.விஜயகுமார் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஆனார். போலீஸ் கமி‌ஷனராக இருந்த நிலையில் 2003–ம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடித்த கமாண்டோ படையின் தலைவர் ஆனார். 2004–ல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பிறகு கே.விஜயகுமார் மீண்டும் மத்திய பணிக்கு அனுப்பப்பட்டார்.

கடந்த 2012–ம் ஆண்டு மத்திய ஆயுதப்படை போலீசில் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றியபோது அவர் பணி ஓய்வுபெற்றார். அவரது சிறப்பான பணித்திறனை பாராட்டி அவருக்கு சிறப்பு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

சிறப்பு பணிக்காக மத்திய உள்துறைக்கு பணிக்கு சென்ற அவர் நக்சலைட்டுகளுக்கு எதிரான வியூகம் வகுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். 6 ஆண்டுகாலம் பணிநீட்டிப்பில் பணியாற்றிய கே.விஜயகுமார், கடந்த 2018-ம் ஆண்டு அந்த பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.


வீரப்பனை சுட்டு வீழ்த்திய விஜயகுமார் திடீர் ராஜினாமா..!!



ஓய்வுக்கு பிறகு, பிரிக்கப்படாத ஜம்மு-காஷ்மீர் மாநில கவர்னரின் ஆலோசகராக செயல்பட்டு வந்தார். அதன்பின், கடந்த 2019-ம் ஆண்டில் உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் நக்சல் பாதிப்பு மிக்க மாநிலங்களுக்கான பாதுகாப்பு பிரச்சினைகளில் அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்கி வந்தார்.

இந்த நிலையில் உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் பதவியை விஜயகுமார் ராஜினாமா செய்திருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காகத் தான் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Trending News

Latest News

You May Like