1. Home
  2. தமிழ்நாடு

திருமணம் நடக்காததால் ஆத்திரம்... பூசாரியின் காதை கடித்த இளைஞர்!!

திருமணம் நடக்காததால் ஆத்திரம்... பூசாரியின் காதை கடித்த இளைஞர்!!

மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த லக்ஷ்மி காந்த் சர்மா என்பவருக்கு விபுல், அருண் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் நீண்ட காலம் திருமணம் தள்ளிச் சென்றுள்ளது. இதனால் மன வருத்தம் அடைந்த லக்ஷ்மி காந்த் சிலரின் அறிவுரையை அடுத்து, வீட்டில் பூஜை நடத்த ஏற்பாடு செய்தார்.

மகன்களுக்கு விரைவாக திருமணம் நடக்க வேண்டும் என்ற நோக்கில் ராஜஸ்தானின் கோட்டா என்ற பகுதியைச் சேர்ந்த குஞ்ச்பீகாரி சர்மா என்ற புரோஹிதரை அழைத்து தனது வீட்டில் பூஜை செய்துள்ளார்.

பூஜை நடந்து பல மாதங்கள் ஆகியும் அவரது மகன்களுக்கு திருமணம் நடைபெறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த லக்ஷ்மி காந்த் மகன்களுடன் தனது வீட்டில் பூஜை நடத்திய குஞ்ச்பீகாரி சர்மா என்ற புரோஹிதரின் வீட்டுக்கு சென்று கேட்டுள்ளார்.


திருமணம் நடக்காததால் ஆத்திரம்... பூசாரியின் காதை கடித்த இளைஞர்!!

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த லக்ஷ்மி காந்த் பூஜையை ஒழுங்காக செய்யாததால்தான் அதற்குரிய பலன் ஒழுங்காக கிடைக்கவில்லை என்று கூறி போசரியை கொடூரமாக தாக்கியுள்ளார்.

அப்போது லக்ஷ்மி காந்த்தின் மகனான விபுல் ஆத்திரத்தில் அந்த புரோஹிதரின் காதை கடித்துள்ளார். பூசாரியின் கதறலை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், லக்ஷ்மி காந்த் மற்றும் அவரின் இரு மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like