1. Home
  2. தமிழ்நாடு

ராகிங் தொல்லை இனி இல்லை.. புகார் தெரிவிக்க மின்னஞ்சல் அறிமுகம்..!

ராகிங் தொல்லை இனி இல்லை.. புகார் தெரிவிக்க மின்னஞ்சல் அறிமுகம்..!

மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும் ராகிங் தொடர்பான புகார்களை தெரியப்படுத்த பிரத்யேக மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 'மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் நடவடிக்கைகளை தடுக்க டாக்டர் அருணா வானிகர் தலைமையில் சிறப்புக் குழு ஒன்று தேசிய மருத்துவ ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ளது.


அதன் ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் அளித்த புகார்கள் மீது விரிவான விவாதம் மேற்கொள்ளப்பட்டது. தற்கொலைக்குத் தூண்டும் வகையிலான ராகிங் செயல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ராகிங் தொடர்பான புகார்களை அளிக்க antiragging@nmc.org.in என்ற பிரத்யேக மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள், தங்களது கல்லூரி வளாகங்களில் விரிவாக கொண்டு சேர்க்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like