1. Home
  2. விளையாட்டு

கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்த பாம்பு!!

கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்த பாம்பு!!

இந்தியா – தென்னப்பிரிக்கா அணிக்கு இடையேயான டி20 போட்டியின் போது மைதானத்தில் பாம்பு ஒன்று புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையே 2ஆவது டி20 போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி 7 ஓவர்கள் முடிவில் 68 ரன்கள் எடுத்திருந்தது.


கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்த பாம்பு!!


அப்போது மைதானத்தில் பாம்பு ஒன்று உள்ளே புகுந்ததால் பீல்டிங் செய்து கொண்டிருந்த தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அலறினர். இதனையடுத்து அங்கு வந்த பராமரிப்பு வீரர்கள் மைதானத்தில் ஊர்ந்து சென்று வீரர்களை பயமுறுத்திய பாம்பை பிடித்தனர்.இதனால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

பாம்பு மைதானத்திற்கு வந்தபோது வீரர்கள் மட்டும் இல்லாமல் நேரில் ஆட்டத்தை பார்த்த ரசிகர்களும், நேரலையில் போட்டியை பார்த்தவர்களுக்கும், வெள வெளத்துதான் போனார்கள்.


newstm.in

Trending News

Latest News

You May Like