1. Home
  2. தமிழ்நாடு

உலக அளவில் அசிங்கப்பட்ட இந்தியா... வட மாநில மக்களே காரணம்!!

உலக அளவில் அசிங்கப்பட்ட இந்தியா... வட மாநில மக்களே காரணம்!!

வட இந்தியர்கள் லண்டனிலும் எச்சில் துப்பி சமூகவலைதளத்தில் அசிங்கப்படுத்துவதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

வட இந்தியாவில், பான் மற்றும் புகையிலை பொருட்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றனர். இதைப் பயன்படுத்தும் நபர்கள் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் எச்சில் துப்பி அசிங்கப்படுத்தி வருகின்றனர். இவர்களின் இந்த செயல் பல இடங்களின் அழகையே கெடுத்து வருகிறது.

குறிப்பாக ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகளில் எச்சில் துப்பு சேதப்படுத்தி வருகின்றனர். அபராதம் விதித்தாலும் இவர்கள் இந்த அசிங்கத்தை நிறுத்த மறுக்கின்றனர். பான்பராக் எச்சிலை சுத்தம் செய்வதற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.1200 கோடி வரை ரயில்வே துறை செலவு செய்கிறது.


உலக அளவில் அசிங்கப்பட்ட இந்தியா... வட மாநில மக்களே காரணம்!!


இந்நிலையில், இந்தியாவில் இப்படிக் கண்ட கண்ட இடங்களில் பான்புகையிலையை சாப்பிட்டு எச்சில் துப்புவதுபோல் லண்டனிலும் வட இந்தியர்கள் எச்சில் துப்புவதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

லண்டனில் பான்பராக் புகையிலையை போட்டு மரத்தடியில் எச்சில் துப்புகின்றனர். அப்படி எச்சில் துப்பினால் ரூ.1000 பவுன்ட் அபராதம் விதிக்கப்படும் என அங்கு எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்த்த இணைய வாசிகள் பலரும், வட இந்தியர்களை கிண்டல் செய்து வருகின்றனர்.



newstm.in

Trending News

Latest News

You May Like