1. Home
  2. தமிழ்நாடு

சாலையில் திடீரென பற்றி எரிந்த சொகுசு கார்!!

சாலையில் திடீரென பற்றி எரிந்த சொகுசு கார்!!

சென்னையை அடுத்து வண்டலூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காரைக்குடியைச் சேர்ந்தவர் சதீஷ் என்பவர் சென்னை அடுத்துள்ள நொளம்பூரில் உள்ள அக்கா வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் வண்டலூர் செல்வதற்காக காரில் சதீஷ், பிரதீப் ஆகிய இருவரும் சென்றுள்ளனர்.

திருநீர்மலை அருகே சென்றபோது திடீரென காரின் முன் பகுதியிலிருந்து புகை வந்துள்ளது. இதைப்பார்த்த சதீஷ் உடனே காரை நிறுத்தியுள்ளார். பின்னர் இருவரும் காரை விட்டு இறங்கியுள்ளனர்.


சாலையில் திடீரென பற்றி எரிந்த சொகுசு கார்!!


சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இது பற்றி தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கார் முழுமையாக எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார் தீப்பிடித்தற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like