1. Home
  2. தமிழ்நாடு

ஓட்டல் அறையில் பிரபல நடிகையும் மாடல் அழகியுமான அகன்ஷா மோகன் தூக்கிட்டு தற்கொலை..!!

ஓட்டல் அறையில் பிரபல நடிகையும் மாடல் அழகியுமான அகன்ஷா மோகன் தூக்கிட்டு தற்கொலை..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் வசித்து வந்தவர் அகன்ஷா மோகன் (30). இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 16-ம் தேதி வெளியான 'சியா' என்ற படத்தில் ஷிபெய்ல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் சில விளம்பரங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகையும் மாடல் அழகியுமான அகன்ஷா மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மும்பை அந்தேரியில் ஒரு ஓட்டலில் தங்கி இருந்த அகன்ஷா மோகன் தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஓட்டலில் தங்கி இருந்த அகன்ஷா மோகன் நேற்று வெகு நேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை.


ஓட்டல் அறையில் பிரபல நடிகையும் மாடல் அழகியுமான அகன்ஷா மோகன் தூக்கிட்டு தற்கொலை..!!


இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் ஓட்டலுக்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்குள்ள ஒரு அறையில் அகன்ஷா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த அறையில் இருந்து ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர். அதில், 'எனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல... யாரையும் தொல்லை செய்ய வேண்டாம்' என எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் நடிகையின் மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like