1. Home
  2. தமிழ்நாடு

பிரபல தயாரிப்பாளரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட்!!

பிரபல தயாரிப்பாளரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட்!!

பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளரான ஏக்தா கபூர், வலைத்தள தொடர் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அதன்படி எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ். சீசன் 2 என்ற பெயரில் வலைதள தொடர் ஒன்றின் தயாரிப்பில் அவர் ஈடுபட்டார்.

இதில், மதஉணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன, ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளனர் மற்றும் தேசிய சின்னம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுபற்றி இந்தூரில், ஏக்தா கபூர் மற்றும் பிறர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பீகாரின் பெகுசராய் நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஷாம்பு குமார் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.


பிரபல தயாரிப்பாளரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட்!!


இதேபோன்று, ஏக்தா கபூர் மற்றும் அவரது தாயார் ஷோபா கபூர் ஆகியோருக்கு எதிராக பீகாரின் முசாபர்பூர் நீதிமன்றத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இருவரும் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

ஆனால், அவர்கள் அதை புறக்கணித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like