1. Home
  2. விளையாட்டு

கண்ணீருடன் விடை பெற்றார் ரோஜர் பெடரர்!டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி போட்டியில் தோல்வி!!

கண்ணீருடன் விடை பெற்றார் ரோஜர் பெடரர்!டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி போட்டியில் தோல்வி!!

20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர் ரோஜர் பெடரர் (41). இவர் பாரம்பரியமிக்க விம்பியள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை அதிக முறை வென்ற சாதனை படைத்துள்ளார். தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர் என்ற சாதனைக்கும் ரோஜர் பெடரர் சொந்தக்காரர்.

அண்மையில் டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறபோவதாக ரோஜர் பெடரர் அறிவித்தார். 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவித்தார்.

கண்ணீருடன் விடை பெற்றார் ரோஜர் பெடரர்!டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி போட்டியில் தோல்வி!!

அதன்படி லண்டனில் நேற்று தொடங்கிய லேவர் கோப்பை தொடரில் தனது கடைசி ஆட்டத்தை பெடரர் ஆடினார். இதில் ஐரோப்பிய அணியும், உலக அணியும் நேருக்கு நேர் மோதின. ஐரோப்பிய அணியில் இடம்பெற்றுள்ள ரோஜர் பெடரர், இரட்டையர் பிரிவில் ரபேல் நடாலுடன் இணைந்து அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ - ஜாக் சாக் இணையுடன் மோதினார்.

இந்த போட்டியில் ரோஜர் பெடரர்- ரபேல் நடால் ஜோடி 6-4, 6-7 (2-7), 9-11 என்ற செட் கணக்கில் டியாபோ - ஜாக்சாக் இணையிடம் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி போட்டியில் தோல்வியுடன் விடை பெற்றார் ரோஜர் பெடரர்.


கண்ணீருடன் விடை பெற்றார் ரோஜர் பெடரர்!டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி போட்டியில் தோல்வி!!



பின்னர் ரோஜர் பெடரர் பேசுகையில், "இது ஒரு அற்புதமான நாள், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வருத்தமாக இல்லை. இங்கே இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. கடைசியாக எல்லாவற்றையும் செய்து மகிழ்ந்தேன்" என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like