1. Home
  2. தமிழ்நாடு

வணக்கம்மா.. நா, ஸ்டாலின் பேசுறேன்.. பள்ளிக்கு போன் போட்ட முதல்வர்..!

வணக்கம்மா.. நா, ஸ்டாலின் பேசுறேன்.. பள்ளிக்கு போன் போட்ட முதல்வர்..!

ரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ம் தேதி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் தினமும் பல்வேறு விதமான சிற்றுண்டி வகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி திங்கட்கிழமை உப்புமா, செவ்வாய்க்கிழமை கிச்சடி, புதன்கிழமை பொங்கல், வியாழக்கிழமை உப்புமா, வெள்ளிக்கிழமை கிச்சடியுடன் இனிப்பு வழங்கப்படுகின்றன.


காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க 'சி.எம்.13எஃப்.எஸ்' என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்வரே இதனை நேரடியாக கண்காணிக்கும் வகையில் இந்த செயலி உள்ளது.


இந்நிலையில், காலை சிற்றுண்டி திட்ட ஆய்வுக் கூட்டத்தின் போது, இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படும் விவரங்கள் குறித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி மாதிரி தொடக்கப் பள்ளியின் காலை உணவு வழங்கும் பொறுப்பாளர் ஆர். மணிமேகலையிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.


அப்போது முதல்வர் பேசுகையில், "வணக்கம்மா, நான் ஸ்டாலின் பேசுறேன்... நீங்க மணிமேகலையா.." நீங்க எந்த ஏரியா பாக்குறீங்க..?. இன்று பள்ளியில் எத்தனை பேர் சாப்பிட்டாங்க..?. சரியான நேரத்தில் சாப்பாடு வந்ததா..?. பசங்க எல்லாரும் சாப்பிட்டாங்களா..?. இடையில் ஏதும் பிரச்சினை இருக்கா..?" எனக் கேட்டார்.

அதனை தொடர்ந்து பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் முதல்வர் பேசுகையில், "வணக்கம்மா, நான் ஸ்டாலின் பேசுறேன்… உங்க பள்ளியில் இன்று 36 பேர் காலை உணவு சாப்பிட்டிருக்காங்க… உணவின் தரம் நன்றாக உள்ளதா..?" என்று கேட்டறிந்தார்.

Trending News

Latest News

You May Like