1. Home
  2. தமிழ்நாடு

உருவம் ஒத்துபோனதால் தாய் தான் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதிய மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

உருவம் ஒத்துபோனதால் தாய் தான் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதிய மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர், பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் சந்திரா (72). இவருடைய கணவர் சுப்பிரமணி, கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுப்பிரமணி இறந்து விட்டார். இந்த நிலையில் சந்திரா பஜனை கோவில் தெருவில் உள்ள, தனது மகன் வடிவேலு பராமரிப்பில் வசித்து வந்தார். வயதான சந்திரா அடிக்கடி கோவிலுக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளார். குறிப்பாக சந்திரா சிங்கப்பெருமாள் அருகே உள்ள கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.

வழக்கம்போல நேற்று சந்திரா சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை என தெரிகிறது. உடனடியாக சந்திரா காணாமல் போனதை குறித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் காலை 8.30 மணிக்கு செங்கல்பட்டு தாம்பரம் இடையிலான ரயில் தண்டவாளத்தில், கூடுவாஞ்சேரி அருகே வயதான மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.

இது குறித்த தகவல் நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் மூலமாக தெரியவந்துள்ளது. சந்திரா தான் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக, உறவினர்கள் கருதி உள்ளனர். உயிரிழந்த மூதாட்டியின் உடலை செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உருவம் ஒத்துபோனதால் தாய் தான் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதிய மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மேலும் சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், உருவம் ஒத்துபோனதால் உயிரிழந்தது தனது அம்மா தான் என வடிவேல் உறுதி செய்ததை தொடர்ந்து, உறவினர்களிடம் சந்திராவின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து சந்திரா உயிரிழந்தது குறித்து, அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து சந்திராவின் உடலுக்கு, உறவினர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஊரெங்கும் சந்திராவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டபட்டு, மாலை இறுதி மரியாதையுடன் தாரை தப்பட்டை வைக்கப்பட்டு, நல்லடக்கம் செய்து பாலும் ஊற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கப்படி சந்திராவிற்கு இன்று காலை படையல் போட்ட பொழுது, உயிரிழந்ததாக நல்லடக்கம் செய்யப்பட்ட சந்திரா உயிருடன் வீட்டிற்கு வந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்த உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் உயிரிழந்தது சந்திரா தான் என்ற கோணத்தை மாற்றி தகனம் செய்யப்பட்ட உடல், யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்ததாக கருதி அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் திரும்பி வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


உருவம் ஒத்துபோனதால் தாய் தான் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதிய மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!



Trending News

Latest News

You May Like