1. Home
  2. தமிழ்நாடு

ஏழை மக்களுக்கு சுட சுட பிரியாணி, முட்டை உணவளித்த விஜய் மக்கள் இயக்கம்..!!

ஏழை மக்களுக்கு சுட சுட பிரியாணி, முட்டை உணவளித்த விஜய் மக்கள் இயக்கம்..!!

பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு மே 28-ம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. சுடச்சுட பிரியாணி, முட்டை, கறி குழம்புடன் மதிய உணவு வழங்கப்பட்டது.

இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கூறுகையில்,

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தளபதி விஜயின் சொல்லுக்கிணங்க தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், நகரம், ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது, அதுமட்டுமில்லாமல் புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மதிய உணவு வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like