1. Home
  2. சினிமா

சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் அளித்த பிரபல நடிகை!!

சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் அளித்த பிரபல நடிகை!!

புஷ்பா படம் மற்றும் அதில் நடித்த ரஷ்மிகா மந்தனா குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஐஷ்வர்யா ராஜேஷ், அதில் தாம் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம், பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

நடிகை ராஷ்மிகா 'ஸ்ரீவள்ளி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது. மேலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்தது.

இந்த நிலையில், இந்த கதாபாத்திரம் தனக்கு கிடைத்திருந்தால், ரஷ்மிகாவை விட நன்றாக நடித்திருப்பேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசினார்.


சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் அளித்த பிரபல நடிகை!!

அண்மையில் இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் தனக்கு நல்ல தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாக தெரிவித்தார்.

விஜய் தேவரகொண்டாவுடன் தான் நடித்த 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' எனும் தெலுங்கு திரைப்படம் நினைத்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் தனக்கு கிடைத்திருந்தால் நிச்சயம் நடித்திருப்பேன் என்றார்.

மேலும் அந்த கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மிகவும் அருமையாக நடித்திருப்பார். இருப்பினும் தனக்கு கிடைத்திருந்தால் ரஷ்மிகாவைவிட மிகவும் அருமையாக நடித்திருப்பேன் என்று தெரிவித்தார்.


சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் அளித்த பிரபல நடிகை!!

ஐஷ்வர்யா ராஜேஷின் பேட்டி சர்ச்சையான நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், தாம் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். புஷ்பா படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like