1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளர்!!

அதிர்ச்சி! நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளர்!!

புதுச்சேரியில் தூய்மை பணியாளர் ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அபிஷேகப்பாக்கம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார மையம் உள்ளது. இங்கு டி.என்.பாளையம், தேடுவார் நத்தம் மற்றும் தமிழ்நாடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடு, அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் இல்லாத நிலை ஆகியவற்றால் குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்கள் பல இன்னல்களை சந்திப்பதாக கூறப்படுகிறது.


அதிர்ச்சி! நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளர்!!

அதேபோல் மருத்துவர்கள் குறித்த நேரத்திற்கு பணிக்கு வராமல் நோயாளிகளை காக்க வைப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.

தற்போது குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் விபத்தில் காயமடைந்து, சிகிச்சைக்கு வரும் நபர் ஒருவருக்கு, அங்கு பணிபுரியும் தூய்மை பணியாளர் ஒருவர், கட்டுபோடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like