1. Home
  2. விளையாட்டு

ஆர்சிபி அணிக்கு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே மிகப்பெரிய அடி..!!


ஆர்சிபி அணிக்கு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே மிகப்பெரிய அடி விழுந்திருக்கிறது.

அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஹேசில்வுட், ஐபிஎல் தொடக்க போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் அவர், இப்போது முழுமையாக குணமடையவில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதிபடுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரின் பிற்பகுதியில் ஹேசில்வுட் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும், அப்போது அவரின் உடல்நிலை சூழலை அவதானித்தபிறகு இதனை உறுதி செய்ய முடியும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இது ஒரு பின்னடைவு மட்டுமே என்றிருந்த ஆர்சிபி அணிக்கு மற்றொரு மோசமான செய்தியும் கிடைத்திருக்கிறது. அதாவது அண்மையில் காயத்தில் இருந்து குணமடைந்து ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பிய மேக்ஸ்வெல் இப்போது பிட்டாக இல்லையாம். அதனால் அவர் தொடக்க சில போட்டிகளில் ஆர்சிபி அணிக்கு விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.

ஆர்சிபி ரசிகர்களும் இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆர்சிபி அணிக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்றும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி பெங்களூரு அணி தங்களின் முதல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like