1. Home
  2. தமிழ்நாடு

ஊராட்சி தலைவர்களுக்கு வழங்குவதை போல எங்களுக்கும் கார் கொடுங்க : பேரவையில் முழக்கமிட்ட எம்.எல்.ஏக்கள்..!!

ஊராட்சி தலைவர்களுக்கு வழங்குவதை போல எங்களுக்கும் கார் கொடுங்க : பேரவையில் முழக்கமிட்ட எம்.எல்.ஏக்கள்..!!

சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின் பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், ஊராட்சி அலுவலகர்களுக்கு வாகனங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். அதனை நிறைவேற்றும் விதமாக 244 வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 388 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்களுக்கு வழங்க Scorpio Classic கார் வழங்கப்பட்டுள்ளதாகவும், 19 மாவட்ட ஊராட்சி தலைவர்களுக்கு TATA SAFARI கார் வழங்கவுள்ளதாக கூறினார். முதலமைச்சருக்கு எவ்வளவு பெருந்தன்மை பாருங்க.. நிதி மட்டும் இருந்தால் இன்னும் எவ்வளவோ செய்வார். இது அனைவருக்குமான அரசு என கூறினார்.

அப்போது அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் எங்களுக்கும் கார் கொடுங்க என கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஐ பெரியசாமி, மனது கடலை போல விரிந்திருக்கிறது. நிதி ஆதாரம் தான் சுருங்கி இருக்கிறது. அதற்கு யார் காரணம் ர்ன நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள் என கூறினார். அமைச்சரின் பதிலை கேட்டு அவையில் இருந்த முதலமைச்சர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் சிரித்தனர்.

Trending News

Latest News

You May Like