1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் அதிர்ச்சி..!! கே.கே.நகர் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி..!

சென்னையில் அதிர்ச்சி..!! கே.கே.நகர் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி..!

சென்னை கேகேநகர் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் உடைத்து பணத்தை திருட கொள்ளையர்கள் முயன்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆங்காங்கே ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு வரும் சூழலில் சென்னை கே.கே.நகர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்தை கல்லால் உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளதை அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் மூலமாக போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக போலீசார் சிசிடிவி கேமராக்கள் மூலமாக கொள்ளை அடிக்க முயன்றவர்களை தேடி வருகின்றனர்.

கடந்த மாதம் திருவண்ணாமலை ஏடிஎம் மையத்தில் இருந்து 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. அதில் சம்மந்தப்பட்ட மிகப் பெரிய நெட் ஒர்க்கை கண்டுபிடித்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாணியம்பாடியிலும் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட ஒரு கும்பல் முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like