1. Home
  2. சினிமா

அலறி அடித்து நீதிமன்றம் சென்ற பிரபல நடிகை!!

அலறி அடித்து நீதிமன்றம் சென்ற பிரபல நடிகை!!

விபத்து குறித்து நேரில் ஆஜராகாத யாஷிகாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நடிகை யாஷிகா ஆனந்த் தனது தோழி வள்ளிச்செட்டி பவனி, ஆண் நண்பர்கள் செய்யது, அமீர் ஆகியோருடன் காரில் புதுச்சேரி சென்று விருந்தில் பங்கேற்று விட்டு திரும்பும் போது விபத்தில் சிக்கினார்.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை திரும்பியபோது மாமல்லபுரம் அருகே விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த விபத்தில் தோழி வள்ளிச்செட்டி பவனி சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஆண் நண்பர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். யாஷிகாவுக்கு இடுப்பு எலும்பு மற்றும் வலது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.



அதில் யாஷிகா வேகமாக கார் ஓட்டியதுதான் விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்தது. இதையடுத்து யாஷிகா மீது வேகமாக கார் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

யாஷிகா 129 கி.மீ. வேகத்தில் காரை ஓட்டி செல்லும்போது விபத்து நிகழ்ந்ததாக இ.சி.ஆர். சாலையில் உள்ள வேக கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு யாஷிகா ஆனந்த் ஆஜராக, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


அலறி அடித்து நீதிமன்றம் சென்ற பிரபல நடிகை!!

ஆனால் அவர் ஆஜராகாததால், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் அண்மையில் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ரீ கால் மனு அளித்திருந்த நடிகை யாஷிகா, நேரில் இன்று நீதிமன்றத்திற்கு சென்றார்.

மேலும் நடிகை யாஷிகா ஆனந்த உடல் நிலை பாதிப்புக்காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லையென்று அவரின் வழக்கறிஞர் தரப்பு தெரிவித்ததையொட்டி, நடிகையின் வாரண்ட் ரீகால் செய்யப்பட்ட நிலையில் அடுத்த மாதம் 25-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like