1. Home
  2. தமிழ்நாடு

இன்று இரவு காங். எம்.எல்.ஏ.க்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டம்..!!

இன்று இரவு காங். எம்.எல்.ஏ.க்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டம்..!!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியின் பெயர் குறித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்ததாக கூறி பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, ராகுல் காந்தி மீது குஜராத் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது.

இதனிடையே, ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் நேற்று சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் இன்று இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று கருப்பு உடை அணிந்து வர உள்ளதாகவும், இன்று இரவு முழுவதும் சட்டமன்றத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like